திருவருகைக் காலத்தின் படிப்பினைகள் ஒருவரது வாழ்வு முழுவதுக்கும் பாடமாக அமைய வேண்டும்
- பிரேசில் கர்தினால்
டிச.22,2010. திருவருகைக் காலத்தின் படிப்பினைகள் கிறிஸ்மஸ் பெருவிழாவோடு நின்றுவிடக்
கூடாது, மாறாக இவை ஒருவரது வாழ்வு முழுவதுக்கும் பாடமாக அமைய வேண்டுமென்று பிரேசில் கர்தினால்
ஒருவர் கேட்டுக் கொண்டார்.
சா பவ்லோ உயர்மறைமாவட்டச் செய்தித் தாளில் திருவருகைக்
காலச் சிந்தனைகளை எழுதிய சா பவ்லோ பேராயர் கர்தினால் Odilo Scherer, கிறிஸ்துவே புதிய
மனிதனின் நிறைவான உருவம், அவரைப் பின்பற்றி வாழவே நாம் அழைக்கப்படுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
திருவருகைக்
காலச் சூழலில் நாம் தொடர்ந்து வாழ்ந்து வருகிறோம் என்று அச்சிந்தனையில் கூறியுள்ள கர்தினால்
Scherer, புதிய வானத்தையும் புதிய பூமியையும் எதிர்பார்த்திருக்கும் அதேவேளை கடவுள் தம்மை
அன்பு செய்வோருக்கு அவற்றைத் தயார் செய்கிறார் என்று தெரிவித்துள்ளார்