2010-12-21 15:40:40

11 அரசியல் கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்கிறார் கியூப கர்தினால்.


டிச 21, 2010. அரசியல் கைதிகளை விடுவிக்க உள்ளதாக கடந்த ஜூலையில் வழங்கிய வாக்குறுதியின்படி எஞ்சியிருக்கும் 11 கைதிகளையும் கியூப அரசு விரைவில் விடுவிக்கும் என்ற நம்பிக்கையை தெரிவித்துள்ளார் அந்நாட்டு கர்தினால் ஹைமே ஒர்த்தேகா.

எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்பது நிச்சயமாகத் தெரியவில்லை எனினும், அவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்ற உறுதி தனக்கு இருப்பதாகக் கூறினார் கர்தினால்.

தலத்திருச்சபை கியூப அரசியல் அதிகாரிகளுடன் நடத்தியப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து 52 அரசியல் கைதிகளை விடுவிப்பதாக அறிவித்த அரசு, இதுவரை 41 பேரை விடுவித்துள்ளது. இதில் 40 பேர் இஸ்பெயின் நாட்டில் சென்று குடியேறியுள்ளனர். தற்போது விடுவிக்கப்படாமல் இருக்கும் 11 பேரும் கியூபாவை விட்டு வெளியேறி வேறு நாட்டில் குடியேறமாட்டோம் என மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.