ஐ.நா. நிறுவனம், ஈராக்கில் கிறிஸ்தவர்களுக்கு உதவுமாறு ஓர் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆணையம்
வலியுறுத்தல்
டிச.15,2010. ஈராக்கில் கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு
ஒரு முடிவு காண்பதற்கு ஐ.நா.பாதுகாப்பு அவை ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுமாறு ஒரு சர்வதேச
அமைப்பு விண்ணப்பித்துள்ளது.
ஐ.நா.பாதுகாப்பு அவை, ஈராக் குறித்து கூட்டம் நடத்தியதை
முன்னிட்டு சர்வதேச சமய சுதந்திரம் குறித்த அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசின் ஆணையம் இவ்வாறு
விண்ணப்பித்தது.
அமெரிக்க அரசு, ஈராக்கில் கிறிஸ்தவர்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை
இரட்டிப்பாக்குமாறும் அந்த ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
ஈராக்கின் 16 கிறிஸ்தவக்
கட்சிகள் மற்றும் பிற நிறுவனங்கள் அடங்கிய குழு ஒன்று, இந்த அமெரிக்க ஆணையத்திடம் கேட்டுக்
கொண்டதன் பேரில், ஈராக்கின் கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர்க்கு உதவுவதற்கு
மூன்று பரிந்துரைகளையும் அந்த ஆணையம் முன்வைத்துள்ளது.