2010-12-14 15:03:50

டிசம்பர் 26 - திருத்தந்தை ஏழைகளுடன் உணவு


டிச.14,2010. அருளாளர் அன்னை தெரேசா பிறந்ததன் நூறாம் ஆண்டை முன்னிட்டு இம்மாதம் 26ம் தேதியன்று ஏழைகளோடு மதிய உணவு அருந்தவிருக்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

அன்னை தெரேசா பிறரன்பு சபையினர் உரோம் நகரில் பல்வேறு இடங்களில் ஏழைகளுக்கு உணவளித்து வருகின்றனர். இந்த டிசம்பர் 26ம் தேதி ஞாயிறன்று அந்த ஏழைகளுக்கான உணவைத் திருத்தந்தை வழங்கி அவர்களோடு உணவும் அருந்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உரோம் ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறாரைத் திருகாட்சித் திருவிழாத் திருவிழிப்பு நாளான வருகிற ஜனவரி 5ம் தேதியன்று பார்வையிட்டு அவர்களுக்குப் பரிசுப் பொருட்களும் வழங்குவார் திருத்தந்தை. அங்கு அவர் ஒரு புதிய சிறார்ச் சிகிச்சை மையத்தையும் திறந்து வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது







All the contents on this site are copyrighted ©.