1891 - ஜேம்ஸ் நெய்ஸ்மித் (James Naismith) கூடைப்பந்தாட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். 1941
–உக்ரேனின் ஹார்க்கிவ் நகரில் 15,000 யூதர்கள் நாசிபடையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1950ல்
- இந்திய அரசியல் தலைவர் சர்தார் வல்லபாய் பட்டேலும், 1966ல் – டிஸ்னி நிறுவனத்தை
உருவாக்கிய வால்ட் டிஸ்னியும் இறந்தனர். 1960 - நேபாளத்தின் அரசைக் கலைத்து விட்டு,
நாட்டின் முழு அதிகாரத்தையும் மன்னர் மகேந்திரா தனதாக்கிக் கொண்டார். 1997 - தென்
கிழக்கு ஆசியாவை அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்கும் உடன்படிக்கை பாங்காக்கில் கையெழுத்திடப்பட்டது.2001
- 11 ஆண்டுகள் பழுது பார்க்கும் பணிகளுக்குப் பின்னர் பீசாவின் சாயும் கோபுரம் மீண்டும்
திறக்கப்பட்டது.