2010-12-13 16:05:01

கிறிஸ்தவ பொதுநிலையினர் அமைப்பு கேரளாவில் நடத்திய பேரணி


டிச.13, 2010. சிறுமலர் மறைப்பணி படை என்ற ஒரு கிறிஸ்தவ பொதுநிலையினர் அமைப்பு கேரளாவில் மனந்தவாடி என்ற இடத்தில் பேரணி ஒன்றை அண்மையில் நிகழ்த்தினர்.

ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் கலந்து கொண்டதாகச் சொல்லப்படும் இந்தப் பேரணியை இச்சனிக்கிழமை Tellicherry உயர்மறைமாவட்டப் பேராயர் ஜார்ஜ் வலியமட்டம் ஆரம்பித்து வைத்தார்.

புனித அல்போன்சாவின் கல்லறை இருக்கும் Bharanangnanam என்ற இடத்தில் பொதுநிலையினரால் 63 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, இன்று 27,000 கிளைகளையும் 16 இலட்சம் உறுப்பினர்களையும் கொண்டுள்ளதென்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

இவ்வமைப்பு, பொது நிலையினரின் விசுவாசத்தை வளர்ப்பது மட்டுமன்றி, பல வழிகளில் இறையழைத்தலையும் வளர்த்து வருகிறதென்று பேராயர் வலியமட்டம் கூறினார்.

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்தப் பேரணியின் மூலம் இளையோர் மத்தியில் இன்னும் விசுவாசம் வளர்ந்து வருகிறதென்பதைப் பலரும் உணர முடிகிறதென்று இவ்வமைப்பிற்குப் பொறுப்பேற்றிருக்கும் அருள்தந்தை அன்டனி புதியபரம்பில் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.