ஐரோப்பாவில் இடம் பெற்றுள்ள கிறிஸ்தவர்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் குறித்த
ஆவணங்கள் வெளியாகியுள்ளன
டிச.11,2010. ஐரோப்பா முழுவதிலும் இடம் பெற்றுள்ள கிறிஸ்தவர்களுக்கு எதிரான வெறுப்புக்
குற்றங்கள், சகிப்பற்றதன்மை, பாகுபாடுகள் ஆகியவைகளை விளக்கும் ஆவணங்கள் ஆதாரங்களுடன்
வெளியாகியுள்ளன.
ஐரோப்பாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான சகிப்பற்றதன்மை மற்றும்
பாகுபாடுகள் குறித்த The Observatory என்ற அமைப்பு இவ்வெள்ளியன்று வெளியிட்ட ஐந்தாண்டு
அறிக்கையில் இந்த ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்
தீர்க்கப்படுவதற்குச் சர்வதேச அளவில் நடவடிக்கை எடுக்கப்படுமாறும் இவ்வமைப்பு கேட்டுள்ளது.
ஐரோப்பாவின் பாதுகாப்பும் ஒத்துழைப்பும் குறித்த OSCE என்ற அமைப்பு சமய சுதந்திரம்
குறித்து நடத்திய கூட்டத்தை முன்னிட்டு இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டன.
இவை பற்றிப்
பேசிய இவ்வமைப்பின் இயக்குனர் Gudrun Kugler, சமய சுதந்திரம் பொதுப்படையாகவும் நிறுவன
ரீதியாகவும் ஆபத்தை எதிர்கொள்கிறது என்று கவலை தெரிவித்தார்