2010-12-10 15:28:00

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்குச் சட்டங்கள் இன்றியமையாதவை- ஐ.நா.பொதுச் செயலர்


டிச.10,2010: மேலும், இவ்வுலக மனித உரிமைகள் தினத்திற்கெனச் செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், மனித உரிமைகள், சுதந்திரம், அமைதி, முன்னேற்றம், நீதி ஆகியவற்றுக்கான அடித்தளம் என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்குச் சட்டங்கள் இன்றியமையாதவை என்று குறிப்பிட்டுள்ள அச்செய்தி, இந்த உலகை மேலும் நீதியான இடமாக மாற்றுவதற்கு இந்த நாளில் நாம் தூண்டப்படுவோம் என்றும் கூறுகிறது. மனித உரிமை ஆர்வலர்களின் குரல்கள் மௌனப்படுத்தப்படும் போது நீதி தன்னிலே அமுக்கப்படுகின்றது என்றுரைக்கும் மூனின் செய்தி, நாம் ஒவ்வொருவரும் மனித உரிமைகளைக் காப்பவர்களாகச் செயல்படுவோம் எனவும் அழைப்பு விடுக்கிறது.







All the contents on this site are copyrighted ©.