2010-12-10 15:28:12

ஈராக் ஆயர் பிரதிநிதிகள் குழு ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளனர்


ஈராக் ஆயர் பிரதிநிதிகள் குழு ஒன்று, வரும் வாரத்தில் Strasbourgலுள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அந்நாட்டில் கிறிஸ்தவர்களின் நிலை குறித்து எடுத்துச் சொல்லவிருக்கின்றது.
இந்த நடவடிக்கை குறித்துப் பேசிய மொசூல் சிரிய ரீதி கத்தோலிக்கப் பேராயர் Georges Casmoussa, ஈராக்கில் கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மை மதத்தவரின் உரிமைகள் மதிக்கப்படுவதற்கு மேற்கத்திய நாடுகள் ஈராக் அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று தாங்கள் வலியுறுத்தவிருப்பதாகக் கூறினார்.தாங்கள் ஈராக்கை விட்டு வெளியேற விரும்பவில்லை, மாறாக அங்கு அமைதியுடன் வாழ விரும்புகிறோம் என்றும் பேராயர் Casmoussa கூறினார்.







All the contents on this site are copyrighted ©.