இலங்கையின் போர்க்குற்றங்கள்தொடர்பில் சர்வதேச அழுத்தங்கள்
டிச.10,2010: இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஐக்கிய நாடுகள் நிறுவனத்துக்கு
அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளில், புலம் பெயர்ந்த தமிழர்களுடன், சர்வதேச மனித உரிமை
ஆணைக்குழுவும் இணைந்து கொண்டுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்
புலிகளின் ஊடகப்பிரிவில் பணியாற்றி வந்த இசைப்பிரியா, இலங்கைப் படையினரால் கொடுமையாகக்
கொலை செய்யப்பட்ட வீடியோப் படக்காட்சிகள் வெளிவந்துள்ள இவ்வேளையில் இத்தகைய அழுத்தங்கள்
வலுத்து வருகின்றன. எனினும் போர்க் குற்ற விசாரணைகளுக்கானக் கோரிக்கையை இலங்கை அரசு
நிராகரித்து வருகின்றது. மேலும், தமிழ்ப் போராளிகளால் நடத்தப்பட்டதாகச் சொல்லப்படும்
குற்றங்கள் தொடர்பாகவும் விசாரணைகளை இடம் பெற வேண்டுமென்றும் ஐ.நா. மற்றும் மனித உரிமை
குழுக்கள் கூறி வருகின்றன.