பாகிஸ்தானில் செல்லிடப் பேசிகளில் விவிலியம் கேட்கும் வசதி
டிச.08, 2010. விவிலியத்தைச் செல்லிடப் பேசிகளில் கேட்கக் கூடிய ஒரு வசதி முதல் முறையாக
பாகிஸ்தானில் வெளியிடப்பட்டுள்ளது குறித்து அந்நாட்டு கிறிஸ்தவர்கள் தங்கள் மகிழ்ச்சியைத்
தெரிவித்துள்ளனர். E-verses என்ற ஒரு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் இத்திங்களன்று
இந்த புதிய திட்டத்தை வெளியிட்டது. Philemon Joseph என்பவரால் உருவாக்கப்பட்டுள்ள இந்த
வசதியின் மூலம் ஒருவர் விவிலியத்தையும், திருக்குரானையும் தங்கள் செல்லிடப் பேசிகளில்
கேட்பது எப்படி என்ற முறை இந்த வெளியீட்டு விழாவில் காட்டப்பட்டது. 1997ம் ஆண்டு கத்தோலிக்க
ஆயர்கள் கண்காணிப்பில் உள்ள WAVE ஒலிப்பதிவு மையம் வெளியிட்ட திருப்பாடல்கள் என்ற நிகழ்ச்சி
இந்த திட்டத்திற்கு பெரிதும் ஊக்கம் தந்ததென்று E-verses நிறுவனத்தினர் கூறினர்.தங்கள்
மையத்திலிருந்து வெளியாகும் பல்வேறு நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி, மற்றும் வானொலி நிலையங்களால்
பயன்படுத்தப்படுகின்றன என்று WAVE ஒலிப்பதிவு மையத்தின் இயக்குனர் அருள்தந்தை Nadeem
Shakir கூறினார்.