2010-12-07 15:15:14

புகையிலைப் பொருட்களை பிளாஸ்டிக் பாக்கெட்டில் விற்க நீதிமன்றம் தடை


டிச.7,2010. குட்கா, பான் பராக் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் விற்க இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஜி.எஸ் சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

இத்தடை மார்ச் 2011 முதல் அமலுக்கு வருகிறது.

பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்குப் பதிலாகப் புகையிலைப் பொருட்களை மாற்று வழியில் அடைத்து விற்பது குறித்து மார்ச் 2011-க்குள் முடிவு செய்யும்படி புகையிலைப் பொருள் தயாரிப்பாளர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், புகையிலைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தும்படி மத்திய அரசுக்கு கூறியுள்ள உச்சநீதிமன்றம், அவற்றை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைப்பதால் ஏற்படும் உடல்நலக் கேடுகள் குறித்தும் ஆராயும்படி உத்தரவிட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.