கிமு 43 – உரோமை அரசியல்வாதியும் எழுத்தாளருமான மார்க்குஸ் சிசேரோ படுகொலை செய்யப்பட்டார்.
1900
- மாக்ஸ் பிளாங்க் தனது பெர்லின் இல்லத்தில் வைத்து புகழ்பெற்ற கரும்பொருள் வெளியேற்ற
விதியைக் கண்டுபிடித்தார்.
1965 – கத்தோலிக்கத் திருச்சபையும், கான்ஸ்டான்டிநோபிள்
கிறிஸ்தவ சபையும் 1054 ம் ஆண்டில் ஒன்று மற்றதன் மீது விதித்திருந்த தடையை, திருத்தந்தை
6ம் பவுலும் கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தந்தை அத்தனாகோரசும் ஒரே நேரத்தில் நீக்கினர்.
1972 - அப்போலோ திட்டத்தின் கடைசி விண்கலம் "அப்போலோ 17" சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.
1975
-- கிழக்குத் திமோரை இந்தோனேசியா ஆக்ரமித்தது.
1988 - அர்மீனியாவில் இடம்பெற்ற
6.9 ரிக்டர் நிலநடுக்கத்தில் 25,000 பேர் கொல்லப்பட்டு நான்கு இலட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.
இதே
ஆண்டில் யாசர் அரபாத் இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தார்.
1995 - கலிலியோ விண்கலம்
விண்ணுக்கு ஏவப்பட்டு ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் வியாழனை அடைந்தது