2010-12-04 15:28:01

இலங்கையில் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சமயத் தலைவர்கள் அமைதி நடைப் பயணம்


டிச.04, 2010. இலங்கையில் போருக்குப் பின்னான விவகாரங்கள் தீர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்நாட்டின் பல்சமயத் தலைவர்கள் அமைதி நடைப் பயணம் ஒன்றை நடத்தினர்.

இவ்வியாழனன்று கண்டி காரித்தாஸ் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடைப் பயணத்தில் கலந்து கொண்ட சமயத் தலைவர்கள், அந்நாட்டில் வேறுபாடுகள் களையப்பட்டு பயனுள்ள உறவுகள் கட்டி எழுப்பப்படுவதற்குத் தங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்று தெரிவித்தனர்.

மௌனமாக இடம் பெற்ற இந்த நடைப் பயணத்தின் இறுதியில் பேசிய இந்துமத சுவாமிஜி Brammasiri Sri Warada Sarangam, போர் முடிந்து விட்டது. நாம் இப்பொழுது சுதந்திரமாக உள்ளோம், நம் மத்தியில் எவ்வித வெறுப்போ வன்முறையோ இருக்கக் கூடாது என்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.