2010-12-02 15:48:18

உலகில் கிறிஸ்தவர்களே பெரும்பாலும் வன்முறைகளுக்கு ஆளாகின்றனர் - கர்தினால் Tarcisio Bertone


டிச.02, 2010. மத அடிப்படையில் உலகில் கிறிஸ்தவர்களே பெரும்பாலும் வன்முறைகளுக்கும் புறக்கணிப்புகளுக்கும் ஆளாகின்றனர் என்றும் இன்றைய உலகில் 20 கோடிக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பல வகைகளிலும் உரிமைகளை இழந்துள்ளனர் என்றும் கர்தினால் Tarcisio Bertone கூறினார்.
இப்புதன், வியாழன் ஆகிய இரு நாட்கள் Kazakhstanல் நடைபெற்ற ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைப்பு கூட்டத்தில் உரையாற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் Bertone இவ்வாறு கூறினார்.
தனி மனித உரிமைகளைக் காப்பதில் ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைப்பு எப்போதும் கவனம் செலுத்தி வந்துள்ளதென்று கூறிய கர்தினால் Bertone, ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான சமய உரிமை அண்மைக் காலங்களில் பல நாடுகளில் பறிக்கப்பட்டு வருவதைத் தடுக்க உலக அரசுகள் தீவிர முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தற்போதைய உலகில் நிலவும் பொருளாதாரப் பிரச்சனைகளைக் குறித்தும் பேசிய கர்தினால் Bertone, தனி மனிதர் ஒவ்வொருவரின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் கிடைப்பதற்குரியச் சூழலை உலகில் உருவாக்க ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைப்பு பாடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.இந்த உலகை அனைத்து மக்களுக்கும் பாதுக்காப்பான உலகமாக மாற்றுவதற்கு அரசுகள் எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் ஐ.நா.அமைப்பு உறுதுணையாக இருக்கும் என்று இக்கூட்டத்தில் பேசிய ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.