1581 - இயேசு சபை குரு புனித Edmund Campion மறை சாட்சியாக உயிர் துறந்தார். டிசம்பர்
1 இப்புனிதரின் திருநாள். 1640 - போர்த்துக்கல் ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது. 1864
– ஆபிரகாம் லிங்கன் தனது அரசுத் தலைவர் உரையில் அடிமை ஒழிப்பு குறித்து மீண்டும் பாராளு
மன்றத்தில் வலியுறுத்தினார். 1954 - இந்திய சமூக ஆர்வலர் மேதா பட்கர் பிறந்தார். 1959
- அண்டார்டிக்கா கண்டத்தில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும், அக்கண்டத்தை அறிவியல் ஆராய்ச்சிக்கு
மட்டுமே பயன்படுத்தவும் ஒப்பந்தம் நிறைவேறியது. 1963 - நாகாலாந்து இந்தியாவின் 16வது
மாநிலமானது. 1965 - இந்தியாவில் எல்லைக் காவற்படை அமைக்கப்பட்டது. 1971 - இந்திய
இராணுவம் காஷ்மீரின் ஒரு பகுதியைக் கைப்பற்றியது. 1973 - பப்புவா நியூ கினி ஆஸ்திரேலியாவிடம்
இருந்து சுயாட்சி பெற்றது. 1981 - எயிட்ஸ் நோய் அதிகாரபூர்வமாகக் கண்டறியப்பட்டது.
எனவே, டிசம்பர் முதல் தேதி உலக எய்ட்ஸ் நாள்.1982 - முதலாவது செயற்கை இருதயம் யூட்டா
பல்கலைக்கழகத்தில் பார்னி கிளார்க் என்பவருக்குப் பொருத்தப்பட்டது.