2010-11-30 16:01:41

இஸ்ரயேல் மதத்தலைவர்கள் 2011ம் ஆண்டில் திருத்தந்தையை சந்திக்க உள்ளனர்


நவ.30, 2010. இஸ்ரயேலின் மதத்தலைவர்கள் 2011ம் ஆண்டில் வத்திக்கான் வந்து திருத்தந்தையைச் சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரயேலின் கலிலேயா எனுமிடத்தில் இடம்பெற்ற அந்நாட்டு மதத்தலைவர்கள் அவையின் நான்காவது ஆண்டுக் கூட்டத்தின் முடிவில் இது அறிவிக்கப்பட்டது. இஸ்ரயேலின் இரு உயர் யூத தலைமை குருக்கள் உட்பட பல்வேறு மதங்களின் அங்கத்தினர்களுடன் நான்கு ஆண்டுகளுக்கு முன் இவ்வவை இஸ்ரயேல் வெளியுறவு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது. இஸ்ரயேலின் பல்வேறு மத சமூகங்களிடையேயான உறவுகளை வழிநடத்தவும் மேம்படுத்தவுமான பணியில் பேச்சுவார்த்தைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வரும் திருத்தந்தை மற்றும் தலைமைத் திருச்சபையுடன் ஆன இந்த வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பபிற்காக காத்திருப்பதாக அறிவிக்கிறது இஸ்ரயேல் வெளியுறவுத் துறையின் அறிக்கை.








All the contents on this site are copyrighted ©.