2010-11-29 14:49:54

கருவில் வளரும் ஒவ்வோர் உயிரும் அதிக அக்கறையுடன் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிறார் பாப்பிறை


நவ 29, 2010. கடந்த சனிக்கிழமையன்று மாலை உரோம் நகர் புனித இராயப்பர் பசிலிக்காப் பேராலயத்தில் திருவருகைக்காலத் திருவிழிப்பு வழிபாட்டுச் சடங்கை நிறைவேற்றிய பாப்பிறை, கருவில் வளரும் ஒவ்வோர் உயிரும் அதிக அக்கறையுடன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அழைப்பை முன் வைத்தார்.

இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தில் மனித வாழ்வு அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வேளை, கருவில் வளரும் சிசுக்களின் உயிர் காப்பாற்றப்படுவதற்கு உலகின் கத்தோலிக்கர் எல்லாரும் இச்சனிக்கிழமையன்று திருத்தந்தையோடு சேர்ந்து செபிக்குமாறு திருப்பீட திருவழிபாடு மற்றும் அருளடையாளப் பேராயத் தலைவர் கர்தினால் Antonio Cañizares Llovera வும் திருப்பீடக் குடும்ப அவைத் தலைவர் கர்தினால் Ennio Antonelli யும் இணைந்து உலக ஆயர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தனர்.








All the contents on this site are copyrighted ©.