நவ 27, 2010. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், வரும் ஆண்டு நவம்பர் மாதம் 18ந்தேதி முதல்
20 வரை ஆப்ரிக்காவின் பெனின் நாட்டில் திருப்பயணம் மேற்கொள்வார் என திருப்பீடம் அறிவித்துள்ளது.
'ஒப்புரவு,
நீதி மற்றும் அமைதிப் பணியில் ஆப்ரிக்க திருச்சபை' என்ற தலைப்பில் கடந்த ஆண்டு அக்டோபரில்
இடம்பெற்ற சிறப்பு ஆயர் மாமன்றத்தின் கருத்துக்கோப்புகளை இப்பயணத்தின் போது திருத்தந்தை
வெளியிடுவார் என்றும், இப்பயணம் பெனின் நாட்டில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 150ம் ஆண்டு
கொண்டாட்டங்களைச் சிறப்பிப்பதாக இருக்கும் என்றும் திருப்பீடம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
பெனின்
நாட்டு அரசுத்தலைவர் போனி யாயி, அவரின் அரசு, மற்றும் பெனின் தலத்திருச்சபை ஆகியோர் விடுத்த
அழைப்பினைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் தன் திருப்பயணத்தை அந்நாட்டில் மேற்கொள்கிறார்
திருத்தந்தை.
திருப்பீடத்தில் பல ஆண்டுகள் பணியாற்றி தன் 86ம் வயதில் 2008ம் ஆண்டு
இறைபதம் சேர்ந்த பெனின் நாட்டு கர்தினால் பெர்நார்டின் கந்தேன் குறித்த நினைவுகளைச் சிறப்பிப்பதாகவும்
திருத்தந்தையின் இப்பயணம் இருக்கும் என்கிறது திருப்பீடப் பத்திரிகைத்துறையின் அறிக்கை.