2010-11-26 14:55:42

இத்தாலியக் கத்தோலிக்க வார பத்திரிகையாளர்களுடன் திருத்தந்தை சந்திப்பு


நவ.26, 2010. நற்செய்தி அறிவிப்பதற்கான முயற்சிகளைக் கத்தோலிக்கப் பத்திரிகைகள் அதிகரிக்க வேண்டும் என, இத்தாலியக் கத்தோலிக்க வார பத்திரிகையாளர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த வேளையில் திருத்தந்தை விண்ணப்பித்தார்.
இன்றைய உண்மை நிலைகளின் மத்தியில் வாழும் கத்தோலிக்கச் சமூகம், இயேசுவின் நம்பிக்கை மற்றும் உண்மையின் செய்தியை எடுத்துரைக்கும் புளிக்காரமாய் செயல்பட கத்தோலிக்க பத்திரிகைகள் உதவவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார் பாப்பிறை.
இன்றைய உலகில் ஒவ்வொருவரின் பார்வைகள் வழி நியாயப்படுத்தப்படும் உண்மைகள் என, ஒன்றைக்குறித்த பல உண்மைகள் இருப்பது போல் தோன்றும் நிலையில், மனிதனின் மனம் தேடும் இறுதி உண்மை இயேசுவே எனவும் எடுத்துரைத்தத் திருத்தந்தை, இந்த உண்மையின் வழிதான் உண்மையான மகிழ்வையும் அமைதியையும் காணமுடியும் என்றார்.இன்றைய நிகழ்வுகளை நற்செய்தியின் பார்வையில் நோக்கி, உண்மை நிலைகளை உணரும் பக்குவத்தைக் கத்தோலிக்க பத்திரிகையாளர்கள் பெறவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.