2010-11-25 15:18:09

கம்போடியாவின் நீர்த்திருவிழா நெரிசலில் இறந்தவர்களுக்காக சிறப்புத் திருப்பலி


நவ.25, 2010. கடந்த திங்களன்று கம்போடியாவின் நீர்த்திருவிழாவின் போது இடம்பெற்ற அளவுக்கதிகமான நெரிசலில் இறந்தவர்களுக்காக அந்நாட்டின் தலத் திருச்சபை இவ்வியாழனன்று சிறப்புத் திருப்பலியை ஒப்புக் கொடுத்தது.
கம்போடியாவின் நீர்த்திருவிழா நேரத்தில் ஏற்பட்ட நெரிசலில் 375 பேர் இறந்தனர், மற்றும் 755 பேர் காயமடைந்தனர். இத்துயர சம்பவத்தையொட்டி, நாடெங்கும் இவ்வியாழனைத் துக்க நாளாக அரசு அறிவித்தது.
அதே நாளில் கம்போடியத் தலைநகரான Phnom Penhல் இறந்தோருக்கானச் சிறப்புத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.தலைநகரான Phnom Penhக்கு அருகில் உள்ள வைரத் தீவு எனும் இடத்தில் நான்கு நதிகளின் சங்கமம் இடம்பெறுவதால், அங்கு ஒவ்வொரு வருடமும் நீர்த்திருவிழா கொண்டாடப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.