ஐ.நா.வின் அரசியல் விவகாரத் தலைவர் இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளுக்கு
மூன்று நாள் பயணம்
நவ.25, 2010. ஐ.நா.வின் அரசியல் விவகாரத் தலைவர் இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளுக்கு டிசம்பர்
முதல் வாரத்தில் மூன்று நாள் பயணம் மேற்கொள்வார் என்று ஐ.நா.நிறுவனம் அறிவித்துள்ளது. அரசியல்
விவகாரங்களுக்கான ஐ.நா.வின் உதவிப் பொதுச் செயலர் Lynn Pascoe இந்தியாவில் பல அரசு அதிகாரிகளுடனும்,
அரசியல் தலைவர்களுடனும் பேச்சு வார்த்தைகள் நடத்துவார் என்றும் அகில உலக மற்றும் நாட்டின்
பல்வேறு பிரச்சனைகள் அப்போது பேசப்படும் என்றும் ஐ.நா.செய்தி கூறுகிறது.நேபாளத்தில் Lynn
Pascoe மேற்கொள்ளும் பேச்சு வாத்தைகளில் அந்நாட்டின் அரசுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும்
இடையே உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கணிப்புக்கள் மேற்கொள்ளப்படும் என்று
தெரிகிறது.