நவ 23, 2010. ப்ரேசில் நாட்டில் இந்த செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில்தான் குருவாக
திருநிலைப்படுத்தப்பட்ட ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மிஸ்னா செய்தி நிறுவனம் அறிவிக்கிறது.
மரன்ஹாவொ
மாநிலத்தின் ஹும்பெர்த்தோ தெ காம்போஸ் என்ற பங்கு தளத்தின் பங்கு குருவாகப் பணியாற்றிய
28 வயதாகும் குரு பெர்னார்தோ முனிஸ் ரபெலோ அமரல், தன் பங்குதளத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது,
துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பயணம் செய்த வழியில் உதவி கேட்ட
ஒருவருக்கு தன் வாகனத்தில் இடம்கொடுத்து இக்குரு அழைத்துச்சென்றபோது, அவ்வுதவிப் பெற்றவரே
குருவைச் சுட்டுவிட்டு வாகனத்துடன் தப்பியுள்ளார்.