சீனாவில் திருத்தந்தையின் அனுமதியின்றி நடத்தப்பட்டுள்ள ஆயர் திருநிலைப்பாடு குறித்து
ஹாங்காங் கர்தினால் கவலை
நவ.23,2010. சீனாவில் திருத்தந்தையின் அங்கீகாரமின்றி நடத்தப்பட்டுள்ள ஆயர் திருநிலைப்பாட்டிற்கெதிராய்
எல்லாரும் சேர்ந்து குரல் எழுப்புமாறு வலியுறுத்தியுள்ளார் ஹாங்காங் கர்தினால் ஜோசப்
ஜென் ஜெ கியுன்.
திருத்தந்தை 24 பேரைப் புதிய கர்தினால்களாக உயர்த்திய அதேநாளில்
சீனாவின் ஹெபெய் மாநிலத்தில் செங்டே (Chengde) மறைமாவட்டத்திற்குத் திருத்தந்தையின் ஒப்புதல்
இன்றி ஜோசப் குவோ ஜின்காய் (Joseph Guo Jincai) என்ற குரு சீன அரசின் ஆதரவுடன் ஆயராகத்
திருநிலைப்படுத்தப்பட்டிருப்பது குறித்துத் தான் மிகுந்த கவலை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்
கர்தினால் ஜென்.
எது மீண்டும் நடக்கக்கூடாதோ அது மீண்டும் நடந்துள்ளது என்று யூக்கா
செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த கர்தினால் ஜென், சீனக் கத்தோலிக்கர் மத்தியிலும்
இதே மாதிரியான கவலையைக் காண முடிகின்றது என்றார்.