2010-11-22 16:06:25

புத்த மதத்தலைவர் தலாய் லாமாவுக்கு சமூக நீதிக்கான அன்னை தெரேசா நினைவு விருது


நவ.22, 2010. சமூக நீதிக்கான அன்னை தெரேசா நினைவு விருதை புது டெல்லியில் பெற்றுக் கொண்டார் புத்த மதத்தலைவர் தலாய் லாமா.

மனித மதிப்பீடுகள், மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகள் மற்றும் திபெத் மக்களின் நலன் ஆகியவைகளுக்கான புத்தமதத் தலைவரின் அர்ப்பணத்தைக் கௌரவிக்கும் விதமாக அன்னை தெரேசாவின் பெயரால் விருது வழங்கப்பட்ட இவ்விழாவில் அன்னை தெரேசாவின் பிறரன்பு சபை சகோதரிகளும் கலந்து கொண்டனர்.

நடிகை ராணி முகர்ஜியின் கைகளிலிருந்து இவ்விருதைப் பெற்றுக்கொண்ட புத்தமதத்தலைவர் தலாய் லாமா, இந்தியாவின் பாரம்பரிய அஹிம்சாக் கொள்கைகளையும், மதங்களிடையேயான இணக்க வாழ்வையும் பாராட்டினார்.







All the contents on this site are copyrighted ©.