2010-11-22 16:07:20

இலண்டனில் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கான சிறப்பு செப வழிபாடு


நவ.22, 2010. சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கென இங்கிலாந்தின் அனைத்து கிறிஸ்தவ சபை அங்கத்தினர்களும் பங்குபெறும் சிறப்பு செப வழிபாட்டுக் கூட்டம் டிசம்பர் நான்காம் தேதி இலண்டனில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலண்டனின் கிறிஸ்து பிறப்பு கோவிலில் இடம்பெறும் ஜெப வழிபாட்டிற்குப் பின் கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து Hyde பூங்காவில் ஊர்வலம் ஒன்றை மேற்கொள்வர். அதன்பின்னர் அங்கிருந்து வெஸ்ட் மின்ஸ்டர் பேராலயம் வருவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெக்ஸிகோவின் Cancunல் நடைபெறும் சுற்றுச்சூழல் குறித்த ஐ.நா. கருத்தரங்கையொட்டி இவ்வாண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த ஊர்வலம் இலண்டனில் இடம்பெறுகிறது.







All the contents on this site are copyrighted ©.