2010-11-20 15:21:49

ஜப்பானில் அருளாளர் அன்னை தெரேசா தொடங்கிய கருக்கலைப்புக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்கின்றன


நவ.20,2010. ஜப்பானில் அருளாளர் அன்னை தெரேசா தொடங்கிய கருக்கலைப்புக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம் பெற்று வருவதாக அன்னை தெரேசா சபையின் அருட்சகோதரிகள் கூறினர்.

1980ம் ஆண்டு ஜப்பானுக்குச் சென்ற அன்னை தெரேசா அந்நாட்டில் இடம் பெறும் கருக்கலைப்புகள் குறித்து அதிர்ச்சி அடைந்ததாகவும் இந்தப் பணக்கார நாட்டில் இந்நிலை இருக்கக் கூடாது என்று கூறியதாகவும் அருட்சகோதரி ஆலிஸ் கூறினார்.

தற்சமயம் ஜப்பானில் அன்னை தெரேசா சபையினர் தாய்மார்களுக்கு உதவுவதோடு வீடற்றவர்களுக்கு உணவும் வழங்கி வருவதாக அச்சகோதரி கூறினார்.







All the contents on this site are copyrighted ©.