2010-11-20 15:19:47

ஈராக் கிறிஸ்தவர்களுக்குப் பிரிட்டன் அரசு உதவி செய்ய ஆயர்கள் வேண்டுகோள்


நவ.20,2010. துன்புறுத்தப்படும் ஈராக் கிறிஸ்தவர்களுக்குப் பிரிட்டன் அரசு தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யுமாறு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்க ஆயர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஈராக் சிறுபான்மைக் கிறிஸ்தவச் சமுதாயம் அல் கெய்தா பயங்கரவாதிகளால் அண்மையில் தாக்கப்பட்டது குறித்தத் தங்களது வருத்தத்தைத் தெரிவித்த பிரிட்டன் ஆயர்கள், பிரிட்டனில் அடைக்கலம் தேடும் ஈராக்கியர்களை நடத்தும் முறை குறித்த அரசின் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்யுமாறு அந்நாட்டு அரசிக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஈராக்கில், 2005ம் ஆண்டு முதல் இதுவரை மொசூல் முன்னாள் பேராயர், ஐந்து குருக்கள் உட்பட சுமார் 900 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும், அக்டோபர் 31ம் தேதி பாக்தாத் கிறிஸ்தவ ஆலயத்தில் இடம் பெற்ற தாக்குதலுக்குப் பின்னர் குறைந்தது ஐந்து கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் சுட்டுக் கொல்லப்பட்டனர் மற்றும் குண்டுவெடிப்புகளுக்கும் பலியாகியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.