2010-11-17 15:02:08

டிஜிட்டல் உலகில் பணி செய்வதற்கு மறைபணியாளர்கள் தேவை - ஆயர் Ron Herzog


நவ.17, 2010. டிஜிட்டல் உலகில் பல்வேறு கண்டங்கள், குடிமக்கள் என்று உருவாகி வருவதால், இந்த உலகில் பணி செய்வதற்கு மறைபணியாளர்கள் தேவை என்று ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
அண்மையில் நிறைவு பெற்ற அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் ஆண்டு கூட்டத்தில் இத்திங்களன்று பேசிய Louisiana வின் ஆயர் Ron Herzog இணையதளத்தில் ஒவ்வொரு நாளும் பெருகி வரும் எண்ணிக்கையைச் சுட்டிக் காட்டி இவ்வாறு கூறினார்.
Facebook என்ற இணையதள வசதியில் தற்போது 50 கோடி பேர் இணைந்துள்ளனர், இந்த எண்ணிக்கை சீனா, இந்தியா என்ற இரு நாடுகளின் மக்கள் தொகைக்கு அடுத்தபடியாக உள்ளதென்று ஆயர் Herzog எடுத்துக் காட்டினார்.இந்த டிஜிட்டல் வசதிகளைப் பெருமளவில் பயன்படுத்தும் இளையோரைக் குறித்து திருத்தந்தை பேசியுள்ளதைச் சுட்டிக் காட்டிய ஆயர் Herzog, இந்த தொழில் நுட்பத்தின் வழியாக நற்செய்தி படிப்பினைகளை வளர்ப்பதற்கு மறைபணியாளர்கள் தேவை என்று கூறிய திருத்தந்தையின் விருப்பத்தையும் வலியுறுத்தினார்.







All the contents on this site are copyrighted ©.