இங்கிலாந்தில் தேவ அழைத்தல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நவ 16, 2010. இங்கிலாந்தில் கடந்த பத்தாண்டுகளில் தற்போதுதான் தேவ அழைத்தல்களின் எண்ணிக்கை
அதிகமாக உள்ளதாக அந்நாட்டின் தேவ அழைத்தல்களுக்கானத் தேசிய செயலகத்தின் குரு Stephen
Lanrgidge கூறினார்.
குருத்துவம் மற்றும் துறவற வாழ்விற்கான அழைப்பிற்குச் செவிமடுப்போரின்
எண்ணிக்கை மெதுவாக அதிகரித்தாலும் அது உறுதியான ஒன்றாக இருப்பதாகக் கூறினார் அவர்.
இங்கிலாந்திற்கான
திருத்தந்தையின் அண்மைத் திருப்பயணத்திற்கு மக்கள் செவிமடுக்கத் துவங்கியுள்ளதால் தேவ
அழைத்தல்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்
குரு Lanrgidge.
இளைஞர்கள் திருச்சபை வாழ்வின் கொடைகள் குறித்துத் தெரிந்து கொள்ளத்
திருச்சபையால் நடத்தப்படும் உலக இளையோர் தினங்கள் ஒரு நல்ல வாய்ப்பாக இருப்பதாகவும் இங்கிலாந்தின்
திருச்சபைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.