2010-11-15 15:31:34

வியட்நாமில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலத்திருச்சபையின் உதவிகள்.


நவ 15, 2010. அண்மைப் பெரும்புயலால் பாதிக்கப்பட்ட தென் வியட்நாம் மக்களுக்கு அரசுடன் இணைந்து நிதியுதவிகளைத் தாங்களும் ஆற்றிவருவதாக அறிவித்துள்ளது அந்நாட்டின் ஹுங் வான் பங்குத் தளம்.

மக்கள் தங்கள் வீடுகளை மீண்டும் கட்டியெழுப்பவும், சரி பார்க்கவும் என 35 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக உரைத்த அப்பங்குத்தள கத்தோலிக்கத் தலைவர்கள், இவ்வாறு பயன்பெற்றவர்களுள் பெரும்பான்மையினோர் புத்தமதத்தினரும், பூர்வீக மதங்களைப் பின்பற்றுபவர்களும் என்றனர்.

மக்களின் உறைவிடங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்குக் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு பெருமளவில் உதவி வருவதாகக் கூறினார் ஹுவாங் வான் பங்கு குரு ஜான் ட்ரான் வான் ட்ரோங்.








All the contents on this site are copyrighted ©.