2010-11-15 15:30:52

இன்றைய நவீன தலைமுறைக்கான முன்மாதிரிகை அன்னை தெரசா.


நவ 15, 2010. இன்றைய நவீன தலைமுறைக்கு அதிகம் அதிகமாகத் தேவைப்படும் ஒரு முன்மாதிரிகையாக அன்னை தெரசா உள்ளார் எனறார் திரிபுரா மாநில முதல்வர் மானிக் சர்க்கார்.

அன்னை தெரசாவைக் கௌரவிக்கும் விதமாக இம்மாநிலத் தலைநகரில் இடம்பெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவைத் துவக்கி வைத்து உரை வழங்கிய முதல்வர், அன்னை தெரசா வாழ்ந்து பணியாற்றியச் சூழல் நமக்கு மிகவும் பழக்கமானது என்பதாலேயே அவர் நமக்கானச் சிறப்பு முன்மாதிரிகையாக உள்ளார் என்றார்.

அன்னை தெரசா பற்றிய ஆவணப்படங்கள் திரிபுரா மாநிலத்தின் அனைத்து நகர்களிலும் கிராமங்களிலும் திரையிடப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார் மாநில முதல்வர் சர்க்கார்.

திரிபுராவில் கடந்த வார இறுதியில் இடம்பெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் அன்னை தெரசா பற்றி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3 திரைப்படங்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் 3 திரைப்படங்கள், பிரான்சின் இரண்டு திரைப்படங்கள், கனடா, இத்தாலி, இஸ்பெயின் ஆகியவைகளிலிருந்து ஒரு படம் வீதம் என 11 படங்கள் திரையிடப்பட்டன.








All the contents on this site are copyrighted ©.