Antoine de Saint -Exupery என்பவர் எழுதியThe Little Princeஎன்பது
ஓர் அற்புதமான கற்பனைக் கதை. குழந்தை மனம், குழந்தைகளின் வாழ்வு கண்ணோட்டம் இவைகளைப்
பற்றிய பல ஆழமான கருத்துக்கள் பொதிந்ததொரு புத்தகம். இந்தக் கதையின் நாயகன் The Little
Prince குழந்தைப் பருவத்தைத் தாண்டி வளர்ந்துவிட்டவர்களைப் பற்றி சொல்லும் ஒரு சில கருத்துக்கள்
இவை:
வளர்ந்துவிட்டவர்கள் எல்லாருமே முன்பு குழந்தைகளாய் இருந்தனர்.
ஒரு சிலரே இதை நினைவில் வைத்திருக்கின்றனர். வளர்ந்துவிட்டவர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை.
ஒவ்வொன்றையும் அவர்களுக்கு விளக்குவதிலேயே குழந்தைகள் களைப்படைந்து விடுகின்றனர். வளர்ந்துவிட்டவர்களுக்கு
எண்ணிக்கை மிகவும் பிடிக்கும். அவர்களிடம் ஒரு புது நண்பனைப் பற்றிச் சொன்னால், அவனைப்
பற்றிய முக்கியமான கேள்விகளை அவர்கள் கேட்க மாட்டார்கள். "அவனுடைய குரல் எப்படி இருக்கும்?",
"அவனுக்குப் பிடித்த விளையாட்டு என்ன?", "அவன் வண்ணத்துப் பூச்சிகளைச் சேகரிக்கிறானா?"
என்ற முக்கியக் கேள்விகளை அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கேட்பதெல்லாம், "அவனுக்கு என்ன
வயது?", "அவனுக்கு எத்தனை தம்பிகள் உண்டு?", "அவன் எவ்வளவு கனமாய் இருப்பான்?", "அவனுடைய
அப்பா எவ்வளவு சம்பாதிக்கிறார்?" என்ற எண்ணிக்கை நிறைந்த கேள்விகள். இக்கேள்விகள் வழியாக,
அவர்கள் அவனைப் புரிந்துகொள்வதாக நினைக்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே புரிந்துகொள்வதில்லை.
1889ம்
ஆண்டு நவம்பர் 14 -இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்தார். இதையொட்டி,
நவம்பர் 14 - இந்தியாவில் குழந்தைகள் நாள் கொண்டாடப்படுகின்றது.