2010-11-13 14:04:47

இந்தியத் திருச்சபை - ஆஸ்திரேலிய மறைபோதகரைக் கொன்றவர் தூக்கிலிடப்படக் கூடாது


நவ.13,2010 : இந்தியாவில் 1999ம் ஆண்டில் ஆஸ்திரேலிய மறைபோதகர் கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரண்டு மகன்களை உயிரோடு எரித்துக் கொன்ற குற்றவாளிக்கு உச்சநீதிமன்றம் மரணதண்டனை விதிக்க வேண்டும் என்ற ஒரு பரிந்துரைக்குத் திருச்சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்திய மத்திய புலனாய்வு அமைப்பு, குற்றவாளி ரவீந்திர பால் சிங்குக்கு உச்சகட்ட தண்டனை வழங்குமாறு பரிந்துரை செய்துள்ளது.

இது குறித்துப் பேசிய ஒரிசாவின் பெர்ஹாம்பூர் ஆயர் சரட் சந்திர நாயக், யாருக்கும் மரணதண்டனை வழங்கப்படுவதைத் திருச்சபை ஆதரிக்காது என்று கூறினார்.

ஆஸ்திரேலிய மறைபோதகர் கிரஹாம் ஸ்டெயின்ஸ் ஒரிசாவின் மாயூர்பஞ்ச் மாவட்டத்தில் தொழுநோயாளர் மத்தியில் பணியாற்றி வந்தார்.







All the contents on this site are copyrighted ©.