1847 – சர் ஜேம்ஸ் யங் சிம்ப்சன் என்ற பிரித்தானிய மருத்துவர்,
அறுவைச் சிகிச்சைக்கு முன்னர் கொடுக்கப்படும் மயக்கமருந்துக்கு குளோரோஃபாமை முதன்முதலில்
பயன்படுத்தினார்.
1893 - அன்றைய பிரித்தானிய இந்தியாவுக்கும் அதாவது தற்போதைய
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான எல்லைக்கோடு அமைக்கப்படுவதற்கான உடன்பாடு
எட்டப்பட்டது.
1905 - நார்வே மக்கள், குடியாட்சியை விட மன்னராட்சியே சிறந்தது
என வாக்கெடுப்பு மூலம் தெரிவித்தனர்.
1918 - ஆஸ்ட்ரியா குடியரசாகியது.
1927
- மகாத்மா காந்தி இலங்கைக்கான தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை மேற்கொண்டார்.
1994
- இலங்கையின் ஐந்தாவது அரசுத் தலைவராக சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தெரிவு செய்யப்பட்டார்.