மனித வாழ்வு மற்றும் குடும்பத்திற்கான பாதுகாப்பாக கத்தோலிக்கர்கள் முன்வர பரகுவாய் ஆயர்கள்
அழைப்பு.
நவ 09, 2010. பராகுவாய் காங்கிரஸ் அவையின்முன் வைக்கப்பட்டுள்ள பல்வேறு சட்ட முன்வரைவுகள்,
சமூகத்தின் அடிப்படை மதிப்பீடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், மனித வாழ்வு மற்றும்
குடும்பத்திற்கான பாதுகாப்பாக கத்தோலிக்கர்கள் முன் வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்
அந்நாட்டு ஆயர்கள்.
தற்போது அரசின் ஒப்புதலுக்கு என முன்வைககப்பட்டுள்ள, தாய்நலம்,
பாகுபாட்டுடன் நடத்துதல், குடும்ப வன்முறைகள், பெற்றோரின் பொறுப்புகள், பாலினக் கல்வி
போன்றவைகள் குறித்த சட்டப் பரிந்துரைகள் மனித வாழ்வின் ஒன்றிணைந்த வளர்ச்சியை மனதில்
கொண்டதாய் இருக்கவேண்டும் என விண்ணப்பித்துள்ளனர் பராகுவாய் ஆயர்கள். எந்த ஒரு சட்ட நிறைவேற்றலும்
, கருவில் துவங்கியது முதல் இயற்கை மரணம் வரையான மனித வாழ்வின் மதிப்பையும், குடும்பத்தின்
நோக்கத்தையும், குழந்தைகள் மீதான பெற்றோரின் உரிமையையும் கருத்தில் கொண்டதாய் இருக்கவேண்டும்
எனவும் விண்ணப்பித்துள்ளனர் அவர்கள்.
சமூகத்தின் அடிப்படையாக இருக்கும் குடும்பங்கள்,
சமூகத்தின் நிலையானத் தன்மைக்கு ஆற்றிவரும் பங்கு அங்கீகரிக்கப்பட்டு அக்குடும்பங்கள்
பாதுகாக்கப்படுவதற்கு அரசு உதவ வேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளனர் ஆயர்கள்.