பிலிப்பீன்ஸ் அரசின் வாழ்வுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள்
ஊர்வலம்.
நவ 08, 2010. குழந்தைப்பிறப்புத் தொடர்புடையவைகளில் பிலிப்பீன்ஸ் அரசின் வாழ்வுக்கு
எதிரான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல நூற்றுக்கணக்கான மக்கள் ஊர்வலம் ஒன்றை
நடத்தினர்.
தலைநகர் மணிலாவிற்கு வடக்கேயுள்ள லிபா நகரில் இடம்பெற்ற இவ்வூர்வலத்தில்
கலந்துகொண்டோருக்கு உரையாற்றிய லிபா பேராயர் ரமோன் அர்கொல்லெஸ், வாழ்வு மற்றும் குடும்ப
மதிப்பீடுகளுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக மக்கள் எழுந்து நிற்க வேண்டும்
என்றார்.
மக்களின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்று, வாழ்வுக்கு எதிரான நடவடிக்கைகளில்
ஈடுபடும் தலைவர்கள் குறித்த கண்டனத்தையும் வெளியிட்டார் பேராயர்.