ஜார்கண்டில் மதமாற்றத்தடைச் சட்டம் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ். முயற்சி.
நவ 08, 2010. ஜார்கண்டில் மதமாற்றத்தடைச் சட்டத்தைக் கொண்டுவர அம்மாநில முதல்வருடன்
பேச்சுவார்த்தைகள் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மாநிலத்தலைவர்
ஜகன்னாத் சாகி.
ஜார்கண்டின் பிஜேபி முதல்வர் அர்ஜுன் முண்டாவிடம் இது குறித்து
விவாதிக்க உள்ளதாக உரைத்த ஆர்.எஸ்.எஸ். மாநிலத்தலைவர், சீனா இஸ்ரேல் போன்ற நாடுகளில்
மதமாற்றம் என்பது தடை செய்யப்பட்டிருக்க, இந்தியாவில் மட்டுமே அது அனுமதிக்கப்பட்டுள்ளது
என்றார்.
இதற்கிடையே, வெடிகுண்டு தாக்குதல் வழக்குகளில் இராஜஸ்தான் மற்றும் மகராஷ்டிர
மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தலைவர்கள் குற்றம் சாட்டப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு
தெரிவிக்கும் விதமாக, இப்புதனன்று ஜார்கண்டின் 24 மாவட்டங்கள் உட்பட, தேசிய அளவில் போராட்டத்தை
நடத்த உள்ளதாகவும் இவ்வியக்கம் அறிவித்துள்ளது.