எரிமலை விபத்துக்குள்ளான மக்களுக்குக் கத்தோலிக்கர் உதவி
நவ.05,2010. இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் Merapi எரிமலை கடந்த இரவில் நான்காவது தடவையாக
வெடித்துப் புகைகளையும் நெருப்பையும் தொடர்ந்து கக்கி வருகின்ற போதிலும், Samarang உயர்மறைமாவட்டம்
தொடர்ந்து உதவிகளைச் செய்து வருகின்றது.
மிகுந்த ஆபத்தான சூழல் உருவாகியிருக்கின்ற
போதிலும் அவ்வுயர்மறைமாவட்டத் துறவிகளும் பொதுநிலை விசுவாசிகளும் அப்பகுதியில் தங்கி
மனிதாபிமான உதவிகளைச் செய்வதற்குத் தீர்மானித்துள்ளனர்.
இந்த எரிமலை வெடிப்பில்
இறந்தவர்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டியுள்ளது. மேலும் 66 பேர் படுகாயமடைந்துள்ளனர்.