நவ.05,2010. ஈராக்கில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்
என்பதை வலியுறுத்தி அந்நாட்டின் கத்தோலிக்கத் தலைவர்கள் உட்பட அனைத்துக் கிறிஸ்தவ சபைகளின்
தலைவர்கள் ஈராக் பிரதமர் Nuri al-Maliki டம் கோரிக்கையை முன்வைத்தனர்.
பாக்தாத்தில்
இவ்வியாழன் காலை பிரதமர் அல்-மாலிக்கைச் சந்தித்த கிறிஸ்தவத் தலைவர்கள், அண்மை மாதங்களில்
அந்நாடு முழுவதும் கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ இடங்களும் தாக்கப்பட்டது மற்றும் அவர்கள்
எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்தத் தங்கள் கவலையைத் தெரிவித்தனர்.
இந்த
அக்டோபர் 31ம் தேதி முஸ்லீம் தீவிரவாதத் தாக்குதலில் காயம்பட்ட கிறிஸ்தவர்களை மருத்துவமனையில்
சந்தித்த பிரதமர், அத்தாக்குதல் இடம்பெற்ற சிரியக் கத்தோலிக்க ஆலயத்திற்கு இச்சனிக்கிழமை
சென்று கிறிஸ்தவ சமுதாயத்துடனானத் தனது தோழமையுணர்வையும் வெளிப்படுத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.