2010-11-01 15:27:34

பிலிப்பின்ஸ் நாட்டில் நவம்பர் 1, 2 ஆகிய இரு நாட்களிலும் குருக்கள் அனைவரும் முழு நேரப்பணியில் ஈடுபட்டிருப்பர்


நவம்பர் 1, 2010 - பிலிப்பின்ஸ் நாட்டில் நவம்பர் முதல் தேதி விடுமுறை என்றாலும், குருக்கள் அனைவரும் அன்று முழு நேரப்பணியில் ஈடுபட்டிருப்பர் என்று பிலிப்பின்ஸ் ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

பிலிப்பின்ஸ் நாட்டில் நவம்பர் 1, 2 ஆகிய இரு நாட்களிலும் இறந்தோரின் நினைவு சிறப்பான முறையில் கொண்டாடப்படும். கத்தோலிக்கர்கள் இந்த இரு நாட்களிலும் கல்லறைகளில் முழு நாளையும் செலவழிப்பர்.

இந்த இரு நாட்களையும் பக்தியான முறையிலும், இயற்கைச் சூழலைக் கெடுக்காத வண்ணம் குப்பைகளைப் பெருக்காத வகையிலும் கொண்டாட Kalookan ஆயர் Deogracias Iniguez மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

பல இலட்சம் மக்கள் கூடி வரும் இந்த இரு நாட்களிலும் போக்குவரத்து நெரிசலைத் தவிர வேறு எந்த வகையிலும் பிரச்சனைகள் எழவில்லை என்றும், மக்களின் அவசர உதவிகளுக்கு பிலிப்பின்ஸின் செஞ்சிலுவைச் சங்கம் இருநாட்களிலும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.