2010-10-30 16:24:54

இந்தோனேசியாவின் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கத்தோலிக்க, இஸ்லாமியப் மாணவர்கள் இணைந்து திரட்டியுள்ள நன்கொடை


அக்.30, 2010. இந்தோனேசியாவின் அண்மைய இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்குடன் கத்தோலிக்க மற்றும் இஸ்லாமியப் பல்கலைக் கழக மாணவர்கள் இணைந்து நன்கொடைகளைத் திரட்டியுள்ளனர்.

இளையோர் என்றால் அரசை எப்போதும் விமர்சித்துக் கொண்டு இருப்பவர்கள் அல்ல, மாறாக, அவர்களாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முடியும் என்பதை நிரூபித்துள்ளனர் என்றார் இந்தோனேசியக் கத்தோலிக்கப் பல்கலை கழக மாணவர் கழகத்தின் தலைவர் Stefanus Gusma

மேற்கு சுமத்ராவிலுள்ள மேந்தவாய்த் தீவுகளில் இடம்பெற்ற எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென ஒன்பது மாணவர் இயக்கங்களைச் சேர்ந்த கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மாணவர்கள் நன்கொடைகளைத் திரட்டி வழங்கியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.