இந்தோனேசியாவின் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கத்தோலிக்க உதவி அமைப்பின்
உடனடி உதவிகள்.
அக்.30, 2010. இந்தோனேசியாவின் எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமி அழிவுகளால் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்கி வருகிறது CAFOD எனும் கத்தோலிக்க உதவி அமைப்பு.
இவ்வமைப்பின்
பணியாளர்கள் படகுகள் மூலம் தூர இடத்திலுள்ள மெந்தவாய் தீவுகளுக்குச் சென்று போர்வைகள்,
விரிப்புகள், சுத்தக்குடிநீர், சமையல் பாத்திரங்கள் ஆகியவைகளைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
விநியோகித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு 1,100 பேரின் உயிரிழப்புகளுக்குக் காரணமான
நில அதிர்ச்சியைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் நில அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டின்
கத்தோலிக்க அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.