இந்தோனேசியா, ஆப்ரிக்கா நாடுகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருத்தந்தையின் செபங்கள்
அக். 28, 2010 - இந்தோனேசியாவில் இச்செவ்வாயன்று ஏற்பட்ட எரிமலை வெடிப்பு, அதைத் தொடர்ந்த
சுனாமி ஆகியவற்றில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், மேற்கு ஆப்ரிக்காவின் Benin நாட்டில்
கடந்த ஐந்து வாரங்களாய்ப் பெய்து வரும் கனத்த மழையாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள
மக்களுக்கும் தன் ஆழ்ந்த அனுதாபங்களையும், செபங்களையும் தெரிவித்தார் திருத்தந்தை 16ம்
பெனடிக்ட். இயற்கைப் பேரிடர்களால் உயிர்களை இழந்த குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்ட
மக்களுக்கும் தன் தனிப்பட்ட அனுதாபங்களையும் செபங்களையும் இப்புதன் பொது மறைபோதகத்தின்
இறுதியில் கூறினார் திருத்தந்தை.இவ்விரு நாடுகளிலும் துன்பப்படும் மக்களுக்கு உதவிகள்
செய்ய உலகத்தின் அனைத்து நாடுகளிலும் உள்ள கத்தோலிக்க மக்களுக்கு விண்ணப்பங்களையும் சிறப்பான
வகையில் திருத்தந்தை விடுத்தார்.