அக்.27, 2010 - இத்தாலியுள்ள நேப்பிள்ஸ் பேராயர் கர்தினால் Crescenzio Sepe இச்செவ்வாயன்று
முதன் முறையாகச் சீனா சென்றுள்ளார். ஏழைகளுக்கு உதவுவதிலும், வத்திக்கானுக்கும், சீனாவுக்கும்
இடையே நல்லுறவை வளர்ப்பதிலும் ஈடுபட்டுள்ள San’Edigio என்ற போது நிலையினர் அமைப்பின்
தலைவர்களுடன் இச்செவ்வாயன்று சீனா சென்றடைந்த கர்தினால் Sepe, சீன அரசின் மத விவகாரங்களுக்கான
இயக்குனர் Wang Zuo'anஐச் சந்தித்துப் பேசினார்.சீனாவுக்கும், இத்தாலிக்கும் இடையே மதங்கள்
குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுவதற்கான திட்டங்கள் இச்சந்திப்பில் பேசப்பட்டதாகத்
தெரிகிறது.