சமூக இணக்க வாழ்விற்காக திருச்சபை உழைக்கிறது என்கிறார் மகராஷ்டிர முன்னாள் அமைச்சர்.
அக் 26, 2010. கிறிஸ்தவ வளர்ச்சிக் கழகத்தின் இவ்வாண்டிற்கான அன்னை தெரேசா விருது நான்கு
இந்துக்கள், ஓர் இஸ்லாமியர், இரு கத்தோலிக்கர் என மத வேறுபாடின்றி வழங்கப்பட்டுள்ளது
சமூக இணக்க வாழ்வை ஊக்குவிப்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு என பாராட்டியுள்ளார் மகராஷ்டிர
மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஒருவர்.
இந்தியாவில் சமூக இணக்க வாழ்வையும் ஒருமைப்பாட்டையும்
ஊக்குவிப்பவர்களுக்கு என உருவாக்கப்பட்ட இவ்விருது, இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கும்
வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது ஒரு மிக நல்ல தூண்டுதலாய் உள்ளது என்றார் மாநில முன்னாள்
அமைச்சர் சந்திரகாந்த் ஷிவார்கர்.
பல்வேறு மத சமூகங்களிடையே அமைதியை ஊக்குவித்தல்,
கல்வி, நலஆதரவு மற்றும் சமூக நீதிக்காக உழைத்தல் போன்றவைகளில் கத்தோலிக்கத் திருச்சபைக்குத்
தன் பாராட்டுக்களையும் வழங்கினார் அவர்.