2010-10-26 15:55:51

அயர்லாந்து தலத்திருச்சபையில் புதுப்பித்தலுக்கான ஜெப ஆண்டு.


அக் 26, 2010. குருக்களின் தவறான பாலின நடவடிக்கைகளால் பெரும் துன்பங்களை அனுபவித்து வரும் அயர்லாந்து தலத்திருச்சபையில் புதுப்பித்தலுக்கான ஜெப ஆண்டு எனும் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்புரவு, வழிபாடு மற்றும் விவிலிய வாசிப்புகள் மூலம் குணப்படுத்தலை ஊக்குவித்து புதுப்பித்தலைக் கொணரும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள இத்திட்டம், திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறான நவம்பர் 28ந்தேதி துவக்கப்பட்டு ஓராண்டு காலத்திற்கு நீடிக்கும்.

அயர்லாந்து தலத்திருச்சபையின் புதுப்பித்தலுக்கான முயற்சிகளில், விவிலிய வாசகங்களை அடிப்படையாகக் கொண்ட ஜெபங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநற்கருணை வழிபாடு, ஒப்புரவு அருட்சாதனம், வெள்ளிக்கிழமை உண்ணா நோன்பு ஆகியவற்றில் குருக்களோடு பங்கு பெற கத்தோலிக்க விசுவாசிகள் அனைவரும் ஊக்குவிக்கப்படுவார்கள் எனவும் அயர்லாந்து ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.