திருத்தந்தையையும் திருப்பீட அதிகாரிகளையும் சந்தித்தார் Seychelles நாட்டு அரசுத்தலைவர்
அக்.25, 2010 - Seychelles நாட்டின் அரசுத்தலைவர் James Alix Michel இத்திங்களன்று காலை
திருப்பீடத்தில் திருத்தந்தையையும், திருப்பீட அதிகாரிகளையும் சந்தித்து, இரு நாடுகளுக்கும்
இடையேயான உறவு குறித்து கலந்துரையாடினார்.
திங்கள் காலை திருப்பீடத்தில் திருத்தந்தையை
சந்தித்து உரையாடிய பின், திருப்பீடச்செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுடன்
ஆன உறவுகளுக்கான செயலர் பேராயர் தொமினிக் மெம்பர்த்தி ஆகியோரை சந்தித்த அரசுத்தலைவர்,
மனித மாண்பை முன்னேற்றுவதில் இரு நாடுகளிடையேயான அர்ப்பணம் மற்றும் ஒத்துழைப்பு குறித்து
விவாதித்தார்.
திருப்பீட அதிகாரிகளுடன் ஆன கலந்துரையாடலில், சமூக முக்கியத்துவம்
வாய்ந்த துறைகளான குடும்பம், இளைஞர் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் குறித்த அக்கறை குறித்தும்
விவாதித்தார் Seychelles அரசுத்தலைவர் James Alix Michel.