அக்.23,2010. கடந்த ஆண்டு நாசாவின் ராக்கெட் ஒன்று நிலவில் மோதி ஏற்படுத்திய பள்ளம் தொடர்பான
விரிவான தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
நாசாவின் ‘ல்க்ராஸ்’விண்வெளி
திட்டத்தின்படி, நிலவின் தென்கோடியில் மிகவும் ஆழமான மற்றும் இருட்டான பள்ளம் ஒன்றில்
ராக்கெட் ஒன்று ஏவப்பட்டது.
இந்தப் பள்ளத்திற்குள் ஒரு போதும் சூரிய வெளிச்சம்
பட்டதில்லை. மேலும் இந்த இடமானது சூரியக் குடும்பத்தில் மிகவும் குளிர்ச்சியான பகுதி
என்றும் எண்ணப்படுகிறது.
ராக்கெட் பள்ளத்தைத் தாக்கியவுடன், பள்ளத்தில் இருந்து
புகை மற்றும் வாயுக்கள் வெளியாகின, இதனை ராக்கெட் பின்னாலே சென்ற விண்கலம் பதிவு செய்தது,
பின்னர் அந்தத் தகவல்கள் ஆராய்ப்பட்டன.
இந்தச் சோதனையில் தன்னுடைய கணிப்புகள்
குறித்து ‘சைன்ஸ் திஸ் வீக்’ என்ற பத்திரிகையில் குறிப்பிட்டுள்ள அமெரிக்காவின் பிரவுன்
பல்கலைகழகத்தின் பேராசிரியர் பீட்டர் ஷுல்ஸ் (Peter Schultz), அந்தப் பள்ளத்தின் அடித்தளத்தில்
தண்ணீர் மற்றுமன்றி இன்னும் ஏராளமான பொருட்கள் இருப்பதாக கூறியுள்ளார்.
கரியமிலவாயு,
அமோனியா, உப்பு, வெள்ளி போன்றவை இங்கே இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள்
தெரிவிக்கின்றனர். அத்தோடு இப்போது கிடைத்திருக்கும் சூரியக் குடும்பம் எப்படி உருவானது
என்பதற்கானப் பதிலை கண்டுபிடிக்கவும் உதவலாம் என்று கருதப்படுகிறது.