அக்.22,2010: அமைதி, முன்னேற்றம், மனித உரிமைகள் ஆகியவற்றிற்கு ஐக்கிய நாடுகள் நிறுவனம்
ஆற்றி வரும் பணியில் உலகெங்கும் நம்பிக்கை வைத்துள்ள இலட்சக்கணக்கான மக்களுக்குத் தனது
நன்றியைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.
அக்டோபர்24,
இஞ்ஞாயிறன்று கடைபிடிக்கப்படும் ஐக்கிய நாடுகள் நிறுவனத் தினத்திற்கெனச் செய்தி வெளியி்ட்டுள்ள
பான் கி மூன், 65 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் ஐ.நா.சாசனம் அமலுக்கு வந்தது எனக்கூறிச்
சகிப்புத்தன்மை, பரஸ்பர மதிப்பு, மனித மாண்பு ஆகிய உலகளாவிய மதிப்பீடுகளை ஐ.நா.தொடர்ந்து
வலியுறுத்தி வருகிறது என்றார்.